சென்னை: சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் புனரமைக்கப்பட்டுள்ள   புதிய கேலரிகள் திறப்பு விழா வரும்  17ந்தேதி நடைபெற உள்ளதாகவும்,  முதல்வர் மு.க.ஸ்டாலின்  புதிய கேலரியை திறந்து வைப்பார் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தலைவரான அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி  தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் வகையில்,  நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 17ம் தேதி திறந்து வைக்க இருப்பதாக, இன்று  அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தனர். சென்னை சேப்பாக்கம் மைதான புதிய கேலரிகள் திறப்பு விழா 17-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்றும், புதிதாக திறக்கப்படவுள்ள ஸ்டாண்டுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தலைவர் சிகாமணி  கூறினார்.