மதுரை:  மதுரை  பெருங்குடி பகுதியில் அமைந்துள்ள விமான நிலைய நுழைவு வாயிலில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் வெண்கல திருவுருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

இன்று மதுரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவிலும் கலந்துகொண்டு, மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில், தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டு பணிகளுக்கான திட்டத்தை தொடங்கி வைத்து அதற்கான லோகோ-வை வெளியிட்டு பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அடுத்ததாக, மதுரையில் பெருங்குடி விமான நிலைய நுழைவாயிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள  அம்பேத்கரின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து  வைத்தார். இந்த நிகழ்வில் எம்.பி திருமாவளவன் உடனிருந்தார். பின்னர் அந்த சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.