சென்னை: ஆஸ்கர் விருது பெற்ற ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதிக்கு ரூ.2 லட்சம் பரிசு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், கோவை, நீலகிரியில் யானை பாகன்கள் வசிக்க உகந்த வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதிஉதவியும் வழங்கினார்.

யானைகளுக்கும் அவர்களுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை படம் பிடித்து காட்டிய The Elephant Whisperer தற்போது ஆஸ்கர் வென்றது. தாயை பறிகொடுத்த பொம்மி என்ற பெண் யானைக்குட்டியும் முகாம் வந்து சேர்ந்தது. இவற்றை, காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெல்லி தம்பதி பராமரித்து வந்தனர். இதன் மூலம் ஆவணப் படத்தில் இடம்பெற்ற குட்டி யானைகளை பராமரித்து வந்த பாகன் தம்பதியான பொம்மன் மற்றும் பெள்ளி மிகவும் பிரபலமாகி உள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரையும் நேரில் பாராட்டுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதற்காக, பாகன் தம்பதி இருவரும் சென்னை வந்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  பொம்மன்-பெள்ளி வாழ்த்து பெற்றனர். அவர்கள் இருவருக்கும் முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து, கேடயம் வழங்கி பாராட்டினார். மேலும், இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  கோவை, நீலகிரியில் யானை பாகன்கள் வசிக்க  சுற்றுச்சூழலுக்கு இசைந்த வீடுகள் கட்ட நிதியுதவி உகந்த வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதியுதவியும் அறிவித்தாடட

முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் பணியாற்றும், பணியாளர்கள் 91 பேருக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் பரிசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (15-3-2023) தலைமைச் செயலகத்தில், முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கர் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன்,  பெல்லி தம்பதியர்கள் சந்தித்தனர். இவர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்து தெரிவித்து, பாராட்டுப் பத்திரமும், பொன்னாடையும் அணிவித்து தலா 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

?

இந்த ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றது.  தமிழ்நாட்டில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் மொத்தம் 91 பணியாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நல்கை வழங்கப்படும் என  முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். மேலும், யானை பராமரிப்பாளர்களாகிய இவர்கள்  வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த, அவர்கள் பண்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்துள்ளார்கள். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை ரூபாய் 5 கோடி செலவில் மேம்படுத்தவும் அரசு அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில், சாடிவயல் பகுதியில், யானைகள் பராமரிக்கத் தேவையான தங்கும் இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் ஒரு புதிய யானைகள் முகாம் ரூபாய் 8 கோடி செலவில் அமைக்கப்படும்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 2022-ஆம் ஆண்டு உதகை பயணத்தின் போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் “அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம்” ஒன்று ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.” என்று தெரிவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.