டெல்லி:  அருணாச்சலப் பிரதேசத்தின் போம்டிலா அருகே இந்திய ராணுவ விமானச் சீட்டா ஹெலிகாப்டர்  நேற்று  காலை விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தையும், விமானிகளையும் இந்திய ராணுவம் தேடி வந்த நிலையில்,  ஹெலிகாப்டரில் பயணம்  2 ராணுவ அதிகாரிகளும் கருகி இறந்தது தெரிய வந்தள்ளது. அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இந்திய ராணுவத்தின் சீட்டா வகை ஹெலிகாப்டர், காலை 9:15 மணியளவில்,  ATC உடனான தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது இதையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணிநடைபெற்றது. அதில், விபத்துக்குள்ளான சீட்டா ஹெலிகாப்டர், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் ராணுவ விழுந்து விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, .விமானியை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டு வந்தது.

இந்த ஹெலிகாப்டரில்,. ஒரு ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரி ஆகியோர் இருந்ததாகவும், அவர்கள்  அசாமின் மிஸ்ஸாமாரி பகுதிக்கு செல்ல இருந்தனர்.  ஆனால், மேற்கு பூம்டிலா மாவட்டம் மன்டலா பகுதியில் பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர், விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

இதற்கிடையே அந்த பகுதி கிராமத்தினர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான தகவலை போலீசாரிடம் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர். பகல் 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் விழுந்து கிடந்த இடம் கண்டறியப்பட்டபோது, ஹெலிகாப்டர் எரிந்து புகைந்து கொண்டிருந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 2 ராணுவ அதிகாரிகளும் கருகி இறந்திருந்தனர். அவர்களின் உடல்மீட்கப்பட்டு,  அடையாளம் காணப்பட்டனர்.  அவர்கள் லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி மற்றும் அவரது உதவி விமானி மேஜர் ஜெயந்த் என்று தெரியவந்தது.

உயிரிழந்த மேஜர் ஜெயந்த்,  தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.