சென்னை:
மிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கலில் வரும் 30-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு ஆகிய இடங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அந்த அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.