சென்னை:
மிழகத்தில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாகத் தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வங்கதேசம் நோக்கி நகரக் கூடும் என்றும், தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.