சென்னை: 
ல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொன்விழாவையொட்டி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,   அதிமுக பொன்விழா எழுச்சியுடன் நடைபெறுவது சசிகலாவிற்குப் பிடிக்கவில்லை என்றும்,  இத்தனை நாட்களாக வெளியே வராமல் பொன்விழா நடக்கும் போது வெளியே வருவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், புரட்சித்தாய் எனப் பெயர் வைத்துக்கொள்ளும் அளவிற்கு சசிகலா என்ன புரட்சி செய்தார்?. பொதுச்செயலாளர் என்ற பொறுப்பைப் பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. சசிகலாவை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்
இவ்வாறு அவர் கூறினார்.