டெல்லி: 6மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

பீகாரில் – மொகாமா ,  கோபால்கஞ்ச்  தொகுதிகளுக்கும் ., மகாராஷ்டிராவின்  அந்தேரி கிழக்கு ,  அரியானாவின்  ஆதம்பூர் , தெலுங்கானாவின்  முனுகோட் ,  உத்தரபிரதேசத்தின் கோலா கோக்ரநாத் மற்றும்  ஒடிசாவின் தாம்நகர்  தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகின்றது.

பீகாரின் கோபால்கஞ்ச்தொகுதி எம்எல்எ சுபாஷ்சிங் கடந்த ஆகஸ்டு மாதம் காலமானார் அதுபோல பீகாரில் உள்ள  மொகாமா தொகுதி எம்எல்ஏ, அனந்த்குமார்சிங்  தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதே போல அந்தேரி கிழக்கு , கோலா கோகர்நாத் , தாம்நகரில் எம்.எல்.ஏக்கள் காலமானதால் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

அதன்படி, அக்டோபர் 14க்குள் வேட்பு மனுத்தாக்கல்  செய்ய வேண்டும். மனுவை திரும்பப்பெற 17ம் தேதி  கடைசிநாள். வருகின்ற நவம்பர்  3ம்தேதிஅனைத்து பகுதியிலும்  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிகை 6ம் தேதி என  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.