வாஷிங்டன்:
பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு ரஷ்ய நீதிமன்றம் 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர். இவர், ரஷ்யாவிற்கு வந்தபோது ஊக்கமருந்து கொண்டு வந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பிரிட்னி கிரைனருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சுமார் 13 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.