நியூயார்க்:
பிரேசில் அதிபர் போல்சனாரோவின் மகன் மற்றும் 2 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

விவசாய அமைச்சர் தெரேசா கிறிஸ்டினா, சொலிசிட்டர் ஜெனரல் புருனோ பியான்கோ மற்றும் பிரேசில் அதிபர் போல்சனாரோவின் மகன்  எட்வர்டோ போல்சனாரோ ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பிரேசில் அதிபர் போல்சனாரோவுடன் அவரது மகன், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஏற்கெனவே அதிகாரி மற்றும் அமைச்சர்கள் 2 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் போல்சனாரோவின் மகன் எடுவார்டோ போல்சனாரோவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.  இதனால் போல்சனாரோவும் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.