லக்னோ: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாக தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள  உத்தரப்பிரதேச பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள்மீது தாக்குதல் நடைபெற்றதாக சில வீடியோக்கள் வடமாநிலங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து தனது டிவிட்டர் சமுக வலைதளத்தில்,  தமிழ்நாட்டில் இந்தியில் பேசியதால், பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் கழுத்தறுத்து கொல்லப்பட்டதாக டிவிட் பதிவிட்ட, உ.பி.மாநில பாஜக செய்தி தொடர்பாளரான வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ரா மீது தமிழ்நாடு காவல்துறை 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதையடுத்து உம்ரா முன்ஜாமின் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு  இன்று விசாரணைக்கு வருகிறது. நீதிபதி ஜஸ்மீத் சிங் விசாரிக்கிறார்.