ஜோஹான்னஸ்பர்க்:
தென் ஆப்ரிக்காவில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் பெயரில் விருது வழங்கப்படுகிறது.

தென் ஆப்ரிக்காவின் தெற்கு ஜோஹான்னஸ்பர்கில் உள்ள லெனேஷியா என்ற இடத்தில், சிவஞான சபை என்ற ஆன்மிக அமைப்பு செயல்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தை பாரம்பரிய மாதமாக இந்த அமைப்பினர் கொண்டாடி வருகின்றனர். அப்போது, மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பெயரில் விருதுகள் வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விருது வழங்கும் நிகழ்வு தடைபட்டது. இந்த ஆண்டு மீண்டும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த முறை, கொரோனா தொற்று பரவலின் போது சிறப்பான சேவையாற்றிய தனிநபர்கள், தொண்டு அமைப்புகள் என, மொத்தம் 22 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஆம்புலன்ஸ் சேவை, டாக்டர்கள், மருந்து கடையினர், மருத்துவமனை என, பல்வேறு தரப்பினருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.