சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.

அவரது கூட்டாளிகள் ஸ்ரீநிவாசலு, பிரேம்குமார்,

ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கும் நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.

இவருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடந்தபோது 178 கிலோ தங்கம், 142 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. பிறகு சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக இவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.  ஜாமீனில் வந்தவரை அமலாக்கத்துறை கைது செய்தது.

மீண்டும் ஜாமீனுக்கு சேகர்ரெட்டி மற்றும் கூட்டாளிகள் முயன்றனர். இரண்டு முறை மறுக்கப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.