கோவை:
ணவு டெலிவரி செய்த இளைஞரை தாக்கிய போக்குவரத்து காவலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவர், உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கோவை பீளமேடு காவல் நிலைய சிக்னல் அருகே தனியார் பள்ளி வாகனம் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்னை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதை கண்டுள்ளார். அந்த வழியே சென்றுகொண்டிருந்த மோகனசுந்தரம், அந்த பள்ளி வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தி பெண்ணை இடித்தது தொடர்பாக தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, சிக்னலில் பணியிலிருந்த சிங்காநல்லூர் போக்குவரத்து காவலர் சதிஷ், பள்ளி வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தியதால் மோகனசுந்தரத்தை தாக்கியுள்ளார். இதனை, அந்த வழியே சென்ற ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

இதற்கிடையே, தனக்கு நீதி வேண்டுமென அவர் கேட்கவே, “இதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம். நீ யார்” எனக் கேட்டுள்ளார் அந்த காவலர். இதைத்தொடர்ந்து மோகனசுந்தரம், `பள்ளி வாகன ஓட்டுநரை அனுப்பிவைத்து விட்டு என்னிடம் இருந்த செல்போனையும் பறித்து கொண்டார் அவர். பள்ளி வாகனம் செய்த தவறை தட்டி கேட்டதற்கு என் மீது தாக்குதல் நடத்தியது நியாமற்ற செயல். சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

தற்போது அந்த காவலர் ஊழியரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சம்மந்தப்பட்ட காவலர் சதிஷ் பணியிட நீக்கம் செய்யப்பட்டதுடன், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டார். பின் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.