டெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான  அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி 27ந்தேதி போட்டி தொடங்கும் நிலையில், ஆகஸ்ட் 28ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெற உள்ளது.

15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த மாதம் 27ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட் 6 அணிகள் களமிறங்கி உள்ளன.  இந்த தொடர் இந்த மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது. தகுதிச் சுற்றுக்குப் பிறகு மேலும் ஒரு அணி போட்டியில் இணையும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அணி ரோகித் சர்மா தலைமையில்களம் காண்கிறது. இலங்கையில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த இந்த தொடர் பின்னர் அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.  அதனப்டி வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி போட்டி தொடங்குகிறது.  முதல் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

அதையடுத்து 2வது நாளாக 28ந்தேதி,  இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதை தொடர்ந்து ஆகஸ்ட் 31-ம் தேதி 6-வதாக தகுதி அடையும் அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது.

சாம்பியனை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி செப்டம்பர் 11-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும்  என தெரிவிக்கப்பட்டு உள்ளது.