நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் காலை 11.15 மணி நிலவரப்படி அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதிக்கும் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவில், விக்கிரவாண்டியில் 84% வாக்குகளும், நாங்குநேரியில் 66% வாக்குகளும் பதிவாகின. 2021ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் முடிவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இத்தேர்தல் முடிவுகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து அதிமுக வேட்பாளர்கள் இரு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். விக்கிரவாண்டி தொகுதியில் 16,706 வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரி தொகுதியில் 3,033 வாக்குகள் வித்தியாசத்திலும் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் காலை 11.15 மணி நிலவரப்படி,

விக்கிரவாண்டி தொகுதி

அதிமுக: 44,960 வாக்குகள்

திமுக: 28,254 வாக்குகள்

நாம் தமிழர்: 1,145 வாக்குகள்

வித்தியாசம்: 16,706 வாக்குகள்

 

நாங்குநேரி தொகுதி

அதிமுக: 9,381 வாக்குகள்

திமுக: 6,348 வாக்குகள்

நாம் தமிழர்: 274 வாக்குகள்

வித்தியாசம்: 3,033 வாக்குகள்

இரு தொகுதிகளிலும் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பதில், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.