athithi
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் திரைப்பட நடிகை அதிதி தற்கொலை முயற்சி என செய்திகள் வெளியானது அனைவருக்கும் தெரியும். எதற்காக இவர் தற்கொலை செய்ய வேண்டும் என்று கேள்வி எழும்பியது உடனடியாக அவரை தொடர்பு கொள்ள நினைத்தோம் ஆனால் முடியவில்லை. பின்னர் சில நாட்களுக்கு பிறகு அவரை தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது உடனடியாக மருத்துவமனைக்கு போன் செய்து அவரை சந்திக்கலாமா என்று கேட்டோம் அதற்கு நாளை வாருங்கள் அவர் ஜென்ரல் வார்டுக்கு மாற்றி விடுவோம் அப்போது சந்திக்கலாம் என்றார் டாக்டர்.
அவரை சந்தித்தப்பின் அவர் கூறியது :-
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை அதிதி, துபாயில் என்ஜினியராக பணியாற்றிக் கொண்டிருக்கையில் தமிழ் சினிமா மீது கொண்ட ஆசையால் தமிழ் நாட்டுக்கு வேலையைவிட்டு கிளம்பி வந்துள்ளார். இங்கே வந்தவர் பல தயாரிப்பு கம்பெனிகளில் ஏறி இறங்கி அதன்பின் கிடைத்த முதல் பட வாய்ப்புதான் “நெடுநெல்வாடை”. இப்படத்தின் இயக்குனர் செல்வ கண்ணன். கடந்த வருடம் ஷூட்டிங் ஆரம்பித்துவிடுவோம் என கூறி இவரிடம் அட்வான்ஸ் தொகையை கொடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அப்போது ஒரு அக்ரிமெண்டில் கையெழுத்தும் வாங்கியுள்ளார்கள். சில கட்டுப்பாடுகள் கொண்ட அந்த அக்ரிமெண்டை படித்துவிட்டு கையெழுத்து போட்டு படத்தில் நடிக்கும் ஆர்வத்தோடு காத்திருந்திருக்கிறார் நடிகை அதிதி.
athithi1
பல நாட்கள் காத்திருந்தும் படப்பிடிப்பும் தொடங்கவில்லை, எப்போது இயக்குனரிடம் கேட்டாலும் மழை, வெள்ளம் வந்ததால் ஷூட்டிங் நடைபெறுவதில் சிக்கல் இருக்கிறது என்று கூறியுள்ளார் செல்வ கண்ணன். அதன்பின் அம்ரிஷ் கான் நாயகனாக நடிக்க அதிதி நாயகியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள். இந்த படப்பிடிப்பு ஜனவரி 2016 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது, வெறும் 3 நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்த படப்பிடிப்பு பின் ஹீரோவும் ஹீரோயினும் அதிகம் பேசி பழகுவதை பொருத்துக்கொள்ள முடியாத செல்வ கண்ணன் உடனடியாக ஹீரோவை படத்திலிருந்து தூக்கியுள்ளார். இந்த தகவலை அறிந்த அதிதி என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தார், அதன் பின் தான் அவருக்கு பிறச்சனை ஆறம்பமானது.
தொடர்ந்து அதிதியை செக்ஸ் டார்சர் செய்ய ஆரம்பித்தாராம் செல்வ கண்ணன் அவரின் ஆசைக்கு இனங்காக அதிதியை பல முறை அடித்து துன்புரித்தியுள்ளார் இந்த காமூகன்.
அதை அவரே எங்களுக்கு பிரத்தியேகமாக கொடுத்த வீடியோ பேட்டி உங்களுக்காக :-
https://www.youtube.com/watch?v=_rHIAPAUubA