சென்னை: நிரந்தர வைப்பீடாக ரூ.15 கோடியை  செலுத்த நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷாரின்  ‘மருது’ பட பைனாஸ் சம்பந்தமாக, விஷால் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் ரூ.21 கோடி பெற்ற கடன் தொகையை, அவரது வேண்டு கோளின்படி,  பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான லாகா செலுத்தியது. இதற்கான இருவருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், குறிப்பிட்டபடி, விஷால் லைகா நிறுவனத்திடம் பணத்தை திருப்பி கொடுக்காததால், லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் பல கட்ட விசாரணையைத் தொடர்ந்து, இன்று  இன்று (பிப்ரவரி 12) மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது லைக்கா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  தங்களிடம்  வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல், நடிகர் விஷாலின்  ‘வீரமே வாகை சூடும்’ படத்தை ஓடிடியில் வெளியிடக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லைக்கா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக  நடிகர் விஷால், ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டும் என  உத்தரவிட்டது. மேலும் பணத்தை செலுத்தியதற்கான ரசீதை 3 வாரங்களுக்குள் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.