சென்னை: தமிழகத்தில் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 92,206 ஆக அதிகரித்துள்ளது. கொரோனவால் இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,232 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்த 74 பேரில், தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனையில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் தொடர்ந்து 55-ம் நாளாக இரட்டை இலக்கை எட்டியுள்ளது.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.