சென்னை: அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல்  பல கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று  அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களாக 74 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.  அதனையடுத்து இன்று  அ.தி.மு.க. தலைமைச் செயற்குழுவில் 80 பெண்கள் உறுப்பினர்களாக  நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெயிட்டுள்ள அறிக்கையில்,  அனைத்திந்திய அண்ணா திராவவிட முன்னேற்றக் கழக திருத்தி அமைக்கப்பட்ட தலைமைச்செயற்குழு உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறர்கள் என தெரிவக்கப்பட்டுள்ளது.

அதன்படி,   முன்னாள் அமைச்சர்கள் சரோஜா, செல்வி ராமஜெயம், ராஜலட்சுமி,  மகளிர் இணை செயலாளர் சக்தி கோதண்டம், துணை செயலாளர்கள் சகுந்தலா, கலைச்செல்வி, அழகு தமிழ்ச்செல்வி, நூர்ஜகான், மணிமேகலை மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் மரகதம் குமரவேல், இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் ராஜலட்சுமி  உள்பட 80 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து,  வருகிற மே மாதம் செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.