சென்னை: பராமரிப்பு பணி காரணமாக 30ந்தேதி முதல் டிசம்பர் 3ந்தேதி வரை சென்ட்ரல் டூ கோவை, எழும்பூர் டூ சேலம் வழித்தடங்களில் 8 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னை -கோவை இடையே இயக்கப்பட்டு வரும் சில ரயில்கள் டிசம்பர்-3ம் தேதி அன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல் சென்னை எழும்பூர் -சேலம் இடையே இயக்கப்பட்டு வரும் ரயில்கள் 30,1,2,3 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. பராமரிப்பு பணியின் காரணமாக இந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை எழும்பூரில் இருந்து சேலம் இடையே இரவு 11:55 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் நாளை (நவம்பர் 30ந்தேதி) மற்றும் டிசம்பர் 1ஆம் தேதி, இரண்டாம் தேதி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் இருந்து எழும்பூருக்கு இரவு ஒன்பது முப்பது மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்(22154) டிசம்பர் 1, 2,3 தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு மதியம் 2:30 மணிக்கு இயக்கப்படும் ரயில்( 12679) டிசம்பர் 3ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 6. 15 மணிக்கு இயக்கப்படும் இன்டெர்சிட்டி விரைவு ரயில்( 12680) டிசம்பர் 3ஆம் தேதி அன்று ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு காலை 6. 10 மணிக்கு இயக்கப்படும் ரயில் (12675) டிசம்பர் 3ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

கோவை சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 3 .15 மணிக்கு இயக்கப்படும் ரயில்( 12676) டிசம்பர் 3ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு காலை 7. 10 மணிக்கு இயக்கப்படும் ரயில்( 12243) டிசம்பர் 3ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது .

கோவையிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 3. 5 மணிக்கு இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில்(12244) டிசம்பர் 3ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.