சென்னை: 75 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால்தான் பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும், ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் பொதுத்தேர்வு எழுதலாம் என்ற செய்தி தவறானது என அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 12ம் வகுப்பு முதல்தேர்வான தமிழ்முதல்தாள் தேர்வை அம்பாயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் எழுதாது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உயர்அதிகாரிகளுடன் அலோசனை கூட்டம் நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷ், செய்தியாளர்களிடம் பேசும்போது, தேர்வு எழுதாத மாணவர்களை கண்காணித்து, அவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அப்போது, ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிகளுக்கு வந்தாலே மாணவர்கள் தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்,  பொதுத்தேர்வு எழுத   75 சதவீதம் வருகைப் பதிவு இருக்க வேண்டியது கட்டாயம். அவ்வாறு இருந்தால்தான் பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும் என  தெரிவித்ததுடன்,   கொரோனா காலத்தில் ஆல் பாஸ் பெற்றவர்கள்தான் தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் பொதுத்தேர்வு எழுதலாம் என்ற செய்தி தவறானது என விளக்கம் அளித்துள்ளார்.