திருச்சி:
திருச்சி அருகே லாரி – ஆம்னி மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.