வாஷிங்டன்:
மெரிக்காவின் சிகாகோ நகரில் சுதந்திர தின அணிவகுப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்கா உருவான 246-வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன.

இந்நிலையில், இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணிவகுப்பு நடந்தது.

அணிவகுப்பு தொடங்கிய பின் 10 நிமிடங்களில் திடீரென வந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.