சென்னை: தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் டாஸ்மாக் மதுபான கடைகளையும், பார்களையும் திறந்து வைத்துக்கொண்டு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதாக கூறி, வாகனங்களில் செல்வோரை மடக்கி அபராதம் வசூலித்து வருகின்றனர் காவல்துறையினர். இவ்வாறாக  கடந்த 7 வாரத்தில் மட்டும், மக்களிடம் இருந்து 6 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்துசாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது. அபராதத் தொகைரூ.10,000/ அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்தப்படுவதில்லை, ஆனால் நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபாரதம் செலுத்துவதில்லை. மேலும் 7,532 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே இதுபோன்ற விதிமீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் (Call centers) மூலம் தகவல் தெரிவித்து கடந்த 05.03.2023 முதல் 11.03.2023 வரை அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தன் விளைவாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் அழைப்பு மையங்களின் அழைப்பை ஏற்று 545 பேர் ஆஜராகி அவர்களது நிலுவை வழக்குகளை இணையதளம் மூலம் செலுத்தினார்கள். மேலும் பலர் அழைப்புமையங்களுக்கு வெளியில் பணம் செலுத்தியதால், அவர்கள் வேறுவிதமாக அபராதம் செலுத்தியிருந்தாலும், அழைப்பு மையங்களின் உதவியுடன் முடிந்த வழக்குகளின் விவரங்களையும் அபராதத் தொகையையும் இந்த அழைப்பு மையங்களில் இருந்து சேகரித்தனர். இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் 10 அழைப்பு மையங்களில் 816 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக ரூ.84,62,500/-செலுத்தப்பட்டன. கடந்த ஆறு வாரங்களில் அழைப்பு மையங்களின் இதே போன்ற நடவடிக்கைகளால் 4.922 வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.5,0916,000/- அபராதம் தொகை செலுத்தப்பட்டன.

இதனால் ஏழாவது வாரத்தில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 5.738 மதுபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு. ரூ.5.93.78.500/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் நிலுவையில் உள்ள மதுபோதை வழக்குகளை தீர்வு காண்பதற்காக போக்குவரத்து விதி மீறல்களுக்கு எதிராக செயல்படுபவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. எற்கனவே இது போன்று மது போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு இதுவரை 347 நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்த செயல்பாட்டில் உள்ளன என்று தெரியப்படுத்திக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய சாலைகளில், மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் காவல்துறையினரால் குழுவை வந்து, அனைத்து வாகன ஓட்டிகளை யும், மது அருந்தி உள்ளார்களா என சோதித்து, அவர்களில் மது அருந்தியவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர். விபத்துக்களை தடுக்கவே, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதம் வசூலிக்கும் காவல்துறையினர், அபராதம் வசூலித்துவிட்டு, அந்த வாகன ஓட்டிகளை விடுவித்து விடுவதால், அவர்களால் மீண்டும் விபத்து ஏற்படாது என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா? அல்லது அவர்கள் போதை தெளியும் வரை அவர்களை பத்திரமாக பாதுகாக்க முடியுமா?

இதுமட்டுமின்றி, பொதுவாக அனைத்து சாலைகளிலும் மதுபானக் கடைகளும், பார்களும் திறந்து வைத்துக்கொண்டு, அங்கு சென்று குடித்துவிட்டு, அமைதியாக வீடு திரும்புபவர்களை கைது செய்து அபராதம் வசூலிக்கின்றனர். இது எந்த வகையில் நியாயம். அமர்ந்து குடிப்பதற்குதானே பார்கள் திறந்து வைக்கப்பட்டு உள்ளன. அப்படி இருக்கும் பணி முடிந்து வீடு திரும்புவர்கள், தங்களின் தேவைக்கேற்ப பாரில் அமைர்ந்து மது அருந்திவிட்டு, வீடு திரும்புகின்றனர். அவர்களை கைது செய்து அபராதம் வசூலித்து, அவர்களின் வயிற்றிறெரிச்சலை ஏன் காவல்துறை பெற வேண்டும். அதற்கு பதிலாக டாஸ்மாக் பார்களை மூடிவிடலாமே? பார்களை மூட தமிழ்நாடு அரசை வலியுறுத்தலாமே? 

பார் இல்லை என்றால் எவரும் அங்கே சென்று குடிக்க மாட்டேனே. கண்டிப்பாக குடிக்க வேண்டும் என்பவர்கள் வீடுகளுக்கு சென்று குடித்துக்கொள்வார்களே… அதுபோல சாலையோர பெட்டிக்கடைகளில் மது ஊற்றிக்கொடுக்கும் நிகழ்வுகள் அனைத்து பகுதிகளிலும் அரங்கேறி வருகின்றன. அதை முழுமையாக தடுத்தாலே, மது குடிப்போர், தங்களது சொந்த இடத்துக்கு சென்று குடிக்கும் சூழல் உருவாகுமே… 

இதுபோன்றறை தேவையான நடவடிக்கைளை எடுப்பதை தவிர்த்துவிட்டு, அப்பாவி மக்களையும், உடல் அலுப்புக்காக மது அருந்திவிட்டு, அமைதியாக வீடு திரும்புபவர்களையும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதாக கூறி அநியாயகமாக அபராதம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதும், அதை பெருமிதமாக அறிவித்து மார் தட்டுவதும் எந்தவிதத்தில்நியாயம்?   சிந்தியுங்கள் அரசு அதிகாரிகளே, காவல்துறையினரே…

அபராதமாக இத்தனை கோடி வசூல் என நடுத்தர மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை விட்டுவிட்டு, முதலில் பார்களை மூடச்செய்து டாஸ்மாக் விற்பனையை ஒழுங்குபடுத்த முயற்சி செய்யுங்கள் ஆட்சியாளர்களே.. அடுத்த தலைமுறை குடிகாரனமாக மாறிவருகிறது என்பதை கவனித்துக்கொள்ளுங்கள்…