அபாடான்:
ரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

அபாடானில் உள்ள 10 அடுக்கு கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது.

இதில், இடிபாடுகளில் 80-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு படையினர், மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.