ஸ்ரீநகர்,

ம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வடகாஷ்மிரில் உள்ள  நவ்காம் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ராணுவத்தினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

அப்போது ராணுவத்தினரை எதிர்த்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்களுக்கு பதிலடியாக ராணுவத்தினரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிமருந்துகள், துப்பாக்கிகளை ராணுவத்தினர் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனரா என தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.