ஸ்ரீநகர்,

காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம்மீது பயங்கரவாதிகள்  திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 3 பேர் பலியாகினர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது, பயங்கரவாதிகள் இன்று அதிகாலை திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில், மூன்று ராணுவ வீரர்கள் மரணமடைந்துள்ளனர். மேலும் ஐந்து வீரர்கள் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள்மீது பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  இன்று அதிகாலை தற்கொலைப் படையை பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவித்  தாக்க முயற்சித்துள்ளனர். அவர்களை எதிர்த்து, இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், ராணுவ கேப்டன் உள்பட மூன்று ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர்.

தீவிரவாதிகளில் இரண்டு பேரும் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப் பட்டனர்.