பட்டாபிராம்: சென்னை அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்மூலம்  பெண்களின் உயர்கல்வி 27 சதவிகிம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கி வைத்தார். டெல்லி முதல்வர்அர்விந்த் கேஜ்ரிவால் முன்னிலையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.   அதாவது,‘ இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர் கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், பெண்களுக்கான தொழில்வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.

புதுமைப் பெண் திட்டத்தின் முதற்கட்டத்தில் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் இடைநிற்றலில் இருந்து 12,000 மாணவிகள் மீண்டும் உயர் கல்வியில் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.  இதன் மூலமாக தற்போது உயர்கல்வி பயிலும் 1.13 லட்சம் மாணவியர் இந்தத் திட்டத்தில் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்த திட்டத்தின் 2வது கட்ட தொடக்க விழா இன்று சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் இந்து கல்லூரியில் இன்று நடைபெற்றது. விழாவில் மாணவிகளுக்கு உதவிகளை வழங்கி உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்,.  இந்த புதுமைப்பெண் திட்டத்தினால் உயர்கல்வி சேர்க்கை 27% ஆக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இவ்விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 12,000 மாணவிகள் மீண்டும் உயர் கல்வியில் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.