டெல்லி:  இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 3,000ஐ நெருங்கி  உள்ளது. நேற்று ஒரே நாளில் 2927 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 32 பேர் உயிரிந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவலை வெளியிட்டு உள்ளது. அதனப்டி, நேற்று ஒரே நாளல் புதிதாக மேலும்  2,927 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,65,496 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும் 32 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,23,654  ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளல், 2,252 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,25,563 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனாவுக்க சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,279 ஆக உயர்ந்துள்ளது.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக உள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 21,97,082 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,88,19,40,971 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.