தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று – மற்றும் நேற்றைய பாதிப்பு அடைப்பு குறிக்குள்

சென்னையில் 844 (939), செங்கல்பட்டில் 465 (474), திருவள்ளூரில் 161 (191) மற்றும் காஞ்சிபுரத்தில் 80 (87) பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 118 (131), திருநெல்வேலி 112 (87), தூத்துக்குடி 84 (57), சேலம் 61 (36), கன்னியாகுமரி 60 (52), திருச்சி 58 (73), விழுப்புரம் 48 (30), ஈரோடு
41 (36), ராணிப்பேட்டை 39 (43), தென்காசி 37 (43), மதுரை 33 (43), திருவண்ணாமலை (26) மற்றும் விருதுநகரில் (54) தலா 32 பேருக்கும், கடலூர் 30 (17),

தஞ்சாவூர் 29 (30), திருப்பூர் 28 (15), திண்டுக்கல் 26 (23), தேனி (47) மற்றும் சிவகங்கையில் (31) தலா 25 பேருக்கும், புதுக்கோட்டை 23 (7), கிருஷ்ணகிரி 20 (24),

திருவாரூர் 19 (9), பெரம்பலூர் 18 (13), நாமக்கல் 17 (30), கள்ளக்குறிச்சி 16 (13), வேலூர் 15 (14),

தருமபுரி (11) மற்றும் ராமநாதபுரத்தில் (5) தலா 14 பேருக்கும், மயிலாடுதுறை 12 (15), நீலகிரி 11 (9), நாகப்பட்டினம் 10 (7),

கரூர் 6 (9), அரியலூர் 2 (1), திருப்பத்தூர் 1 (5) நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர, அமெரிக்காவில் இருந்து வந்த 2 பேருக்கும், குவைத், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இன்று மொத்தம் 32,447 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 1,444 ஆண்கள் 1,227 பெண்கள் என மொத்தம் 2,671 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

2,516 பேர் இன்று குணமடைந்த நிலையில் 18,842 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.