சென்னை: கடந்த 6 மாதங்களில் 25 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக, கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்து உள்ளார். அதாவது 2022ம் அண்டு   செப்டம்பர் முதல் தற்போது வரை இவ்வளவு டன் நெல்முதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

சென்னை அண்ணாநகர் நுகர்ப்பொருள் வாணிபக் கழக கிடங்கில் உள்ள பொருட்களின் கையிருப்பு குறித்து, கூட்டுறவுத் துறை செயலாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தபோது, விவசாயிகளுக்கு எந்த குறையும் நேராமல் இருக்க முதலமைச்சர் முயற்சி மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டவர், விவசாயிகளிடம் இருந்து நெல்முதல் தொடர்ந்து கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

2022 செப்டம்பர் முதல் தற்போது வரை 2,866 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 25 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறியவர், இது  கடந்த ஆண்டை காட்டிலும் 2 லட்சம் டன் நெல்  அதிகம், என்றவர், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகையாக, 3.27 லட்சம் விவசாயிகளுக்கு 5ஆயிரத்து 104 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், கூட்டுறவு வங்கிகள் மூலம் 16.4 லட்சம் நபர்களுக்கு 12,671 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், கால்நடைத்துறை மூலம் 2.63 லட்சம் நபர்களுக்கு 1,808 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணவசூல் புகார் தொடர்பாக 9 சிறப்பு குழுக்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விவசாயிகளிடம் விதிமீறி பணம் வசூலித்த 90 பணியாளர்கள் நிரந்தரமாகவும் , 19 பணியாளர்க்ள தற்காலிகவும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேபோன்று, தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான 21 மாடர்ன் ரைஸ் மில்களும் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது, அதனால் தொழிலாளர்கள் அச்சபட தேவையில்லை என்று உறுதியளித்தார்.