சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று பரவல்  நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று  ஒரே நாளில் 1,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  92,206 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை 76,494 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 13,743  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சென்னையில் இதுவரை  1969 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தமிழக  சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.