டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1,675 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டு உள்ளது. 1635 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. தினசரி பாசிடிவ் ரேட் 0.41% ஆக உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று புதிதாக  1,675 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,40,068 ஆக உயர்ந்தது.

நேற்று சிகிச்சை பலனின்றி  31 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,490 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் தொற்றில் இருந்து ஒரே நாளில் 1.635 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,26,00,737 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு 14,841பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை  1,92,52,70,955 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13,76,878 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.