தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 1025, செங்கல்பட்டில் 369, திருவள்ளூரில் 121 மற்றும் காஞ்சிபுரத்தில் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 118, கன்னியாகுமரி 72, திருச்சி 67, திருநெல்வேலி 64, தூத்துக்குடி 54, மதுரை 49,

விருதுநகர் 39, சேலம் 33, ராணிப்பேட்டை 29, ஈரோடு 26, விழுப்புரம் 22, திருப்பூர் மற்றும் சிவகங்கையில் தலா 20 பேருக்கும்,

கிருஷ்ணகிரி 17, நாமக்கல் 15, பெரம்பலூர் 14, கடலூர் 13, திருவண்ணாமலை மற்றும் வேலூரில் தலா 12 பேருக்கும், திண்டுக்கல் 11,

புதுக்கோட்டை மற்றும் நீலகிரியில் தலா 9 பேருக்கும், தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் தலா 8 பேருக்கும்,

தேனி மற்றும் தென்காசியில் தலா 6 பேருக்கும், நாகப்பட்டினம் மற்றும் திருப்பத்தூரில் தலா 5 பேருக்கும், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறையில் தலா 4 பேருக்கும்,

தருமபுரி, கரூர் மற்றும் ராமநாதபுரத்தில் தலா 3 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர, ஓமன் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது,

இன்று மொத்தம் 32,520 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 1,310 ஆண்கள் 1,075 பெண்கள் என மொத்தம் 2,385 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

1,321 பேர் இன்று குணமடைந்த நிலையில் 12,158 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.