புதுடில்லி :
16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பக்கூடாது என 2015-ம் ஆண்டு சிறார் குற்றவாளி நீதிச்சட்ட வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி 2015-ம் ஆண்டு சிறார் குற்றவாளி நீதிச்சட்ட வரைவு விதிகளை வெளியிட்டார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு கை விலங்கிடக்கூடாது. அதே போல அவர்களை  காவலில் வைக்கவும் கூடாது. அவர்களுக்கு சிறை தண்டனை அளிக்கக் கூடாது. அவர்களின் பாதுகாப்புக்கான  பாதுகாப்பு மையத்தை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்.
Tamil_News_large_152956220160526055221_318_219
சிறார் குற்றவாளிகள் தங்களுக்கு எதிரான தீர்ப்பில் அதிருப்தியடைந்தால் சிறார்கள் நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உண்டு.  சிறார்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, சமூகத்தில் அவர்கள் பங்களிக்க இயன்றால் அவர்களின் எதிர்காலம் குறித்து கலந்தாலோசித்து சிறார்கள் நீதிமன்றம் முடிவெடுக்கும்” –  இவ்வாறு அந்த சட்டவரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.