சென்னை:
சென்னையில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில்,  இன்று மட்டும் மேலும்  14 பேர் பலியாகி உள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  98,767 ஆக உயர்ந்துள்ளது.   இதுவரை 83,890 பேர் நோய் தொற்றில் இருந்து குணமான நிலையில், தற்போதைய நிலையில், 12,785 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 12,880 பேருக்கு தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுவரை சென்னையில் மட்டும்  2092  பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில்,  சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த 16 மணி நேரத்தில் (இன்று காலை 10மணி  நிலவரப்படி) மேலும்  14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும்,ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 2 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.