சென்னை:  திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் உலக முதலீட்டாளார் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறித்து விதி எண் 110-கீழ் முதலமைச்சர் அறிக்கை வாசித்தார்.

அப்போது,  தமிழக மக்களுக்கு திமுகை கொடுத்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. துபாய் பயணத்தில் ரூ.6,100 கோடிக்கு புரிந்துணர்வு  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும்,  கடந்த  10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

கடந்த 10 மாதங்களில்  130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.  ரூ. 68,375 கோடியில் 2.05 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் 68.375 கோடி ரூபாயில் 2.05 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் போடப்பட்டுள்ளது. முதலீடுகளை ஈர்க்க புதிய பணி குழு விரைவில் அமைக்கப்படும், என்று தெரிவித்தார்.

துபாய் பயணத்தில் 12,500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.6,100 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. டி.பி வேர்ல்டு, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. துபாயில் எரிசக்தி, சரக்கு போக்குவரத்து திட்டங்கள், மின்னணுவியல் திட்டங்களில் அதிக அளவிலான முதலீட்டை ஈர்க்க உரையாடினேன். விரைவில் இந்த முதலீடு தொடர்பாக பணிக்குழு அமைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது”

மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும் என்றும், இந்த ஆண்டு இறுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என கூறினார்.