டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 20,018 பேர் குணமடைந்து உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 15,815 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,42,39,372 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி மேலும், 68 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 5,26,996 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் 20018 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,35,93,112 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 1,19,264 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை  2,07,71,62,098 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 24,43,064 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.