சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 2,812 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  சிகிச்சை பலனின்றி  17 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக பட்சமாக சென்னையில் 546பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7.45 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று 1,05,822 மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 6,31,92,873 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 2,812 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு  34,33,966 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்முலம் மொத்த உயிரிழப்பு 37,904 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 11,154 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 33,48,419 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்திலேயே அதிக பட்ச கொரோனா பாதிப்பு சென்னையில் பதிவாகி உள்ளது. சென்னையில் 546 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் 523 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு: 

அரியலூர் 14
செங்கல்பட்டு 238
சென்னை 546
கோவை 523
கடலூர் 35
தருமபுரி 23
திண்டுக்கல் 19
ஈரோடு 152
கள்ளக்குறிச்சி 20
காஞ்சிபுரம் 57
கன்னியாகுமரி 61
கரூர் 32
கிருஷ்ணகிரி 42
மதுரை 36
மயிலாடுதுறை 3
நாகப்பட்டினம் 30
நாமக்கல் 77
புதுக்கோட்டை 22
ராமநாதபுரம் 10
ராணிப்பேட்டை 30
சேலம் 146
சிவகங்கை 25
தென்காசி 4
தஞ்சாவூர் 51
தேனி 11
திருப்பத்தூர் 5
திருவள்ளூர் 123
திருவண்ணாமலை 32
திருவாரூர் 38
தூத்துக்குடி 13
திருநெல்வேலி 30
திருப்பூர் 169
திருச்சி 76
வேலூர் 15
விழுப்புரம் 29
விருதுநகர் 21