குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் லெனின் ஜிதேந்திரா. இவர் எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில் மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியை சேர்ந்த மேகாபார்கவி ( 27) என்ற பெண் என்னை திருமணம் செய்தார். பின்னர் சில நாட்களில் என்னிடம் இருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் 25 பவுன் நகைகள் எடுத்துச் கொண்டு மாயமாகி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் நொய்டாவில் மேகாபார்கவியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிம் கூறியதாவது: வசதியான ஆண்களை தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்வதாக வசியப்படுத்துவேன் குறிப்பாக பணக்கார குடும்பத்தில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட இளைஞர் தான் என்னுடைய இலக்கு. அப்போது தான் எளிதாக மோசடி செய்யலாம். ஒவ்வொரு ஆண்களுடனும் திருமணம் முடிந்த பிறகு 15 நாட்கள் தான் அவர்களுடன் உல்லாசமாக இருப்பேன்.

அதன் பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு என் உறவினருக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறிச் சென்றுவிடுவேன். அதன் பின்னர் வீடு திரும்பவே மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தை சோந்த ராஜேஷ் கோலேஜா என்பரிடம் ரூ.90 லட்சமும், குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த ஹேமந்த்குமார் என்பவரிடம் ரூ.13 லட்சமும், ராஜஸ்தான் மாநிலம் ஜோட்பூர் பகுதியை சேர்ந்த சஜேந்திரராஷ் என்பவரிடம் ரூ.15 லட்சமும், சூரத் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவரிடம் ரூ.10 லட்சமும் மோசடி செய்துள்ளார்.
இதுபோல 11க்கும் மேற்பட்ட ஆண்களை அவர் திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மோசடிக்கு அவளது அக்கா பிராச்சி பார்கவி, உறவினர் தேலேஷ்சர்மா ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர் என கூறப்படுகிறது.