சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,684 பேருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,79,144 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத் தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக தமிழகஅரசு கூறி வருகிறது.
மாநிலத் தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 1091 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,06,096 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 92,128 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 11,720 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 22 பேர் பலியான நிலையில், இதுவரை 2,248 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
சென்னையில் மண்டலம் வாரியாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
1 திருவொற்றியூர் 402
2 மணலி 77
3 மாதவரம் 540
4 தண்டையார்பேட்டை 605
5 ராயபுரம் 797
6 திருவிக நகர் 917
7 அம்பத்தூர் 1,469
8 அண்ணா நகர் 1,260
9 தேனாம்பேட்டை 834
10 கோடம்பாக்கம் 1,326
11 வளசரவாக்கம் 859
12 ஆலந்தூர் 520
13 அடையாறு 917
14 பெருங்குடி 494
15 சோழிங்கநல்லூர் 470
சென்னையில் மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்
1 திருவொற்றியூர் 3,361
2 மணலி 1,677
3 மாதவரம் 2,970
4 தண்டையார்பேட்டை 9,007
5 ராயபுரம் 10,598
6 திருவிக நகர் 7,383
7 அம்பத்தூர் 5,001
8 அண்ணா நகர் 10,605
9 தேனாம்பேட்டை 10,093
10 கோடம்பாக்கம் 10,702
11 வளசரவாக்கம் 5,065
12 ஆலந்தூர் 2,927
13 அடையாறு 6,590
14 பெருங்குடி 2,616
15 சோழிங்கநல்லூர் 2,140
16 இதர மாவட்டம் 1,393