சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்  5,684 பேருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  2,79,144  ஆக அதிகரித்துள்ளது. ஆனால்,  தமிழகத் தில்  கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக தமிழகஅரசு கூறி வருகிறது.

மாநிலத் தலைநகர்  சென்னையில்  நேற்று ஒரே நாளில் 1091 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,06,096 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 92,128  பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 11,720 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 22 பேர்  பலியான நிலையில், இதுவரை 2,248 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

சென்னையில்  மண்டலம் வாரியாக  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1   திருவொற்றியூர்    402
2     மணலி        77
3     மாதவரம்        540
4     தண்டையார்பேட்டை    605
5     ராயபுரம்        797
6     திருவிக நகர்        917
7     அம்பத்தூர்        1,469
8     அண்ணா நகர்    1,260
9     தேனாம்பேட்டை    834
10     கோடம்பாக்கம்    1,326
11     வளசரவாக்கம்    859
12     ஆலந்தூர்        520
13     அடையாறு        917
14     பெருங்குடி         494
15     சோழிங்கநல்லூர்    470

சென்னையில் மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்

1    திருவொற்றியூர்    3,361
2     மணலி        1,677
3     மாதவரம்        2,970
4     தண்டையார்பேட்டை    9,007
5     ராயபுரம்        10,598
6     திருவிக நகர்        7,383
7     அம்பத்தூர்        5,001
8     அண்ணா நகர்    10,605
9     தேனாம்பேட்டை    10,093
10     கோடம்பாக்கம்    10,702
11     வளசரவாக்கம்    5,065
12     ஆலந்தூர்        2,927
13     அடையாறு        6,590
14     பெருங்குடி        2,616
15     சோழிங்கநல்லூர்    2,140
16     இதர மாவட்டம்    1,393