டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 3.56% ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன் படி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 13,086 ஆக பதிவாகிய நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16,159 ஆக அதிகரித்துள்ளதது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,35,31,706  ஆக உயர்ந்துள்ளது.

தற்போது  நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,15,212 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,270 பேர் ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் 15,394 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.  இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,29,07,327 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,98,20,86,763 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 9,95,810 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது