சென்னை:  தமிழ்நாட்டில் இன்று புதிதாக மேலும் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதியாகி உள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதால், அனைத்து கட்டுப்பாடுகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இருந்தாலும் இன்னும் ஒருசில மாதங்கள் முகக்கவசம் அணிவது நல்லது என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக கொரோனா உயிரிழப்பு இன்றி தொற்று பாதிப்பும் வெகுவாக குறைந்துள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 24 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 34,52,955 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 11 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,51,142 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக கொரோனா உயிரிழப்பு இல்லாத நிலையில், மொத்த உயிரிழப்பு 38,025 ஆக தொடர்கிறது.

இன்று மட்டும் 31 பேர் தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34,14,674 ஆக உள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும்  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் 19,156 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 6,57,13,531 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு: 

அரியலூர் 0
செங்கல்பட்டு 5
சென்னை 11
கோவை 1
கடலூர் 2
தர்மபுரி 0
திண்டுக்கல் 0
ஈரோடு 0
கள்ளக்குறிச்சி 0
காஞ்சிபுரம் 4
கன்னியாகுமரி 0
கரூர் 0
கிருஷ்ணகிரி 0
மதுரை 0
மயிலாடுதுறை 0
நாகப்பட்டினம் 0
நாமக்கல் 0
நீலகிரி 0
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 0
ராமநாதபுரம் 0
ராணிப்பேட்டை 0
சேலம் 1
சிவகங்கை 0
தென்காசி 0
தஞ்சாவூர் 0
தேனி 0
திருப்பத்தூர் 0
திருவள்ளூர் 0
திருவண்ணாமலை 0
திருவாரூர் 0
தூத்துக்குடி 0
திருநெல்வேலி 0
திருப்பூர் 0
திருச்சி 0
வேலூர் 0
விழுப்புரம் 0
விருதுநகர் 0