06-1446786558-vaiko-mother-11-600
நேற்று மறைந்த வைகோவின் தாயர் மாரியம்மாள் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது  இரங்கல் அறிக்கை இயல்பாக யதார்த்தமாக இருக்கிறது.
அந்த அறிக்கையில்  கி.வீரமணி கூறியுள்ளதாவது:
“ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அருமைச் சகோதரர் வைகோ அவர்களின் அன்னையார் மாரியம்மாள் (வயது 95) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
மறைந்தவர் வைகோ அவர்களுக்கு அன்னையார் மட்டுமல்ல; வைகோ அவர்களின் பொதுத் தொண்டுக்கும், பொது வாழ்வுக்கும் ‘ஆசி’ வழங்கும் ஊக்கச் சக்தியாகவும் இருந்தவர். அவரே பல பொது நிகழ்ச்சிகளில் நேரடியாகப் பங்குகொண்டும் உள்ளார்.
சகோதரர் வைகோ அவர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய நிகழ்வு என்பதில் அய்யமில்லை.
ea8e5e58-7502-4ec3-be81-98fabbd9bcca_S_secvpf.gifஅதேநேரத்தில், அன்னையார் அவர்கள் குறைந்த வயதில் மறைந்துவிடவில்லை. நிறைவாழ்வு வாழ்ந்தவர் – தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பகுத்தறிவு நெறிப்படி வைகோ அவர்கள் ஆறுதலும், அமைதியும் கொள்வார்களாக!
பெருந்துயரத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினருக்கும் நமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”
– இவ்வாறு தனது அறிக்கையில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.