a
டிகரும் தே.மு.தி.க. தலைவருமான  விஜயகாந்தின் “அதிரடிகள்” அனைவரும் அறிந்த விசயம்தான். தன்து கார் டிரைவரில் இருந்து எம்.எல்.ஏவரை அனைவரையும் பொது இடத்தில் வைத்தே அடிப்பது, உதைப்பது, கொட்டுவது என்று தனது ஆத்திரத்தை வெளிப்படுத்திவிடுவார்.
“64 வயது பெரியவர், கட்சித்தலைவர், சட்டசைபில் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர்.. இப்படி நடந்துகொள்கிறாரே… அதுவும், பொது இடத்தில்!” என்று பலரும் தங்கள் ஆதங்கத்தை தெரிவிப்பது உண்டு.
விஜயகாந்த் ஏன் இப்படி பலரையும் நையப்புடைக்கிறார்?
இதற்கான விடையை சொல்லிவிட்டார் நடிகை ராதிகா.
நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கி நடிக்கும் படம் நையப்புடை. இந்த  படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில்தான் இந்த ரகசியத்தை உடைத்தார் நடிகை ராதிகா.
“எஸ்.ஏ. சந்திரசேகர் ரொம்பவும் கோபக்காரர். அவர் எதிர்பார்த்தமாதிரி நடிக்கவில்லை என்றால் அடித்து விடுவார். அவரது பல படங்களில் விஜயகாந்த் நடித்திருக்கிறார். எஸ்.ஏ. சந்திரசேகரைப் பார்த்துத்தான் விஜயகாந்தும் ஆத்திரம் வந்தால் அடித்துவிடுகிறார்” என்றார் ராதிகா.
இதைக்கேட்ட எஸ்.ஏ. சந்திரசேகர், ரசித்து சிரித்தார்.
அப்ப இதுதான் நிசமான காரணமா?