12096154_680882252011850_5137349266573097601_n

டில்லியின் மிக அருகில் இருக்கும் க்ரேட்டர் நோய்டாவில், தன்கூர் என்ற பகுதி இருக்கிறது.   இங்கு தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் பணம் பறித்தது காவல் துறை. இதை எதிர்த்து  காவல்நிலைய வாசலில் போராடிய அந்த ஒடுக்கப்பட்ட மக்களை நிர்வாணப்படுத்தியிருக்கின்றனர் காவல்துறையினர்

 

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் மனம் வெதும்பி எழுதியிருக்கறார் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பழனி பாரதி.

அவரது பதிவு:

இதுவா இந்தியாவின் கலாச்சாரம்?
இதுவா இந்தியாவின் பன்முகத் தன்மை?
இதுவா இந்தியாவின் சகிப்புத்தன்மை?

நான் காறித் துப்புகிறேன்…
டிஜிடல் இந்தியாவின் முகத்தில்
கருப்பாக வழிகிறது
என் எச்சில்…

 

10521698_519829808117096_8556449402500789957_n– https://www.facebook.com/palani.bharathi.5?fref=ts