sila

சில வார்த்தைகள்

உள்ளிருந்து

உறுத்திக்கொண்டே

இருக்கும் பிடுங்க முடியா

அம்பைப் போல்…

சில மௌனங்கள்

திட நெஞ்சையும்

வீழ்த்தி விடும்

உடைப்பெடுத்த

வெள்ளம் போல்..

சில நினைவுகள்

அவ்வப்போது சிலிர்க்க

வைக்கும்

இடைவெளி விட்டுக்

கேட்கும் பாட்டைப் போல்..