a

லங்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் புலிகளே காரணம். புலிகள் இல்லை என்றால் பாலும் தேனும் ஆறாக ஒடும் என்றார்கள்.

புலிகளும் யுத்தமும் இல்லாமல் 6 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் மக்கள் வாழ்வில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

விபச்சார தொழில் குறிப்பாக சிறுவர் விபச்சாரத்தில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. இதுவே இலங்கை அரசின் வெட்கம் கெட்ட சாதனையாக உள்ளது.

ஆனால் இலங்கை அரசோ யுத்த காலத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தைவிட அதிக பணத்தை ராணுவத்திற்கு ஒதுக்குகிறது.

இத்தனை காலமும் அடக்கி வைக்கப்பட்ட மக்கள் தமது தேவைக்காகப் போராட ஆரம்பித்து விட்டார்கள்.

தொழிற் சங்கங்கள் ஒன்றினைந்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.

விவசாயிகள் ஊர்வலமாக வந்து பிரதமருக்கு மனுக்கொடுக்க முனைந்தள்ளனர். ஆனால் பிரதமர் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.

விவசாயிகள் தமது வறுமை நிலையை உணர்த்தும் வண்ணம் கோமணத்துடன் தலைநகரை முற்றுகை இட்டுள்ளனர். ஆனால் அது குறித்து பிரதமர் எந்த வெட்கமும் அடையவில்லை.

மீண்டும் அனைத்து விவசாயிகளுடன் வந்து பாராளுமன்றத்தை அல்லது பிரதமர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

  •  பாலச்சந்திரன்