சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார்   அந்த சந்திப்பில் அவர் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளார்.   அவரது பேட்டியின் முழு விவரம் வருமாறு “

செய்தியாளர்களிடம்  புவியரசன், “தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாகj 29, 30-ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை  பெய்யலாம்.

மேலும் ஜூலை 31, மற்றும் ஆக.1 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.” என அறிவித்துள்ளார்.